👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளில் கடந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் ஏற்பட்டிருக்கிறது
மாணவ மாணவிகள் இருபாலர் கல்வி பள்ளிகளில் படித்தால் பொதுத்தேர்வுகளில் மேலும் சிறப்பாக செயல்படுவதாகக் டெல்லி அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளில் கடந்த 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 88.6 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் தேர்ச்சி விகிதம் 74.8 சதவீதமாகவும் மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளியில் தேர்ச்சி விகிதம் 82 சதவீதமாகவும் இருக்கிறது.
12ஆம் வகுப்புப் பொறுத்தவரை கடந்த பொதுத்தேர்வில் டெல்லியில் உள்ள ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 93.42 சதவீதம். பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.42 சதவீதம். இருபாலர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 98.03 சதவீதம் ஆகும்
மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் எப்போதும் மாணவர்களைவிட அதிகமாகவே உள்ளது. ஆனால், கணிதப் பாடத்தைப் பொறுத்துவரை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
2018ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் 77.27 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 73.78 சதவீதம் மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு இதனை மாற்றி மாணவிகள் 83.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 78.78 சதவீதம் மாணவர்கள் மட்டுமே கணிதத்தில் தேறியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U