சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 11, 2019

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை: சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, திருவரங்கத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய மனு: திருச்சி என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன். இதில், பிடெக் (மெடலர்ஜிகல் மற்றும் மெட்டீரியல்) பிரிவில் மெரிட்டில் தேர்வானேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சக அறிவிப்பின்படி, கடந்த 2017-18ம் ஆண்டிற்கான வருமான சான்று அளித்திருந்தேன். ஆனால், திடீரென எனக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
அதில், நடப்பு நிதியாண்டில் 1.4.2019 கணக்கிட்டு வருமான சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை என்பதால் எனக்கு வழங்கப்பட்ட சேர்க்கையை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் இந்தாண்டு தான் அமலானது. இதற்கான அறிவிப்பில், நடப்பு ஆண்டிற்கான சேர்க்கைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டு கணக்கீட்டின்படி வருமான சான்றிதழ் தாக்கல் செய்தால் போதுமென்றே கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் நானும் வருமான சான்றிதழ் தாக்கல் செய்தேன். தற்போதைய நிதி ஆண்டை கணக்கிட்டு இப்போது சான்றிதழ் தாக்கல் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, எனக்கு திருச்சி என்ஐடியில் வழங்கப்பட்ட சேர்க்கையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.
அப்போது மத்திய அரசு தரப்பில், ‘மனுதாரர் 1.4.2018 முதல் 31.3.2019 வரையிலான நிதியாண்டின்படியே வருமான சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும். அவர் 2017-18ம் ஆண்டின்படி வழங்கியுள்ளார். இது ஏற்புடையதல்ல. பழைய வருமான மதிப்பீட்டின் படி இட ஒதுக்கீடு கோர முடியாது’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் வக்கீல் மெல்டியூ ஆஜராகி, ‘‘2019-20ம் கல்வியாண்டில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் கூறியுள்ளபடி ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு உட்பட்டு இருப்பதாக சான்று வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு வருமானத்தின்படியே சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு கடந்த 2017-18ம் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மனுதாரருக்கு 2 வாரத்தில் மீண்டும் வருமான சான்றிதழ் வழங்கி என்ஐடியில் மீண்டும் சேர்க்கை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews