அங்கன்வாடி பணியாளர்களை வணங்குவது ஆண்டவனை வணங்குவதற்கு சமம்: அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

அங்கன்வாடி பணியாளர்களை வணங்குவது ஆண்டவனை வணங்குவதற்கு சமம்: அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புலியை பார்த்து விரட்டி அடிக்கும் பெண்களை போல அங்கன்வாடி பெண்கள் உள்ளனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பெற்றெடுக்காத குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள் போல வளர்க்கிறார்கள் அங்கன்வாடி பெண்கள் என்றும் புகழாரம் சூட்டினார். அங்கன்வாடி பணியாளர்களை வணங்குவது ஆண்டவனை வணங்குவதற்கு சமம் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆன்ட்ராய்ட் செல்போன்களை, வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதல்கட்டமாக ஆயிரத்து 664 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திட்டங்களை முனைப்பாக மக்களிடத்தில் கொண்டு செல்லக் கூடியவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் என பாராட்டு தெரிவித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews