👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் 20 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(CBSE) 12வது ஆசிரியர் தகுதித்தேர்வை நேற்று நடத்தியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். 104 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மேற்கண்ட தகுதித் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த வாரம் இணைய தளத்தில் ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வுகள் தாள் 1, தாள் 2 என பிரிக்கப்பட்டு காலை மாலை என நடந்தது. முதல் தாள் தேர்வு காலை 9.30 மணிக்கு விடை எழுதத் தொடங்கி மதியம் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தன. மதியத்துக்கான தேர்வுகள் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிந்தன. தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், அந்த தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், தமிழக தகுதித் தேர்வை விடவும் எளிதாக இருந்தது என்றும் குறிப்பிட்டனர்.
சென்னையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தாமதமாக சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வு பகல் 2 மணிக்கு தொடங்கியது. தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் 50 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U