👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்டு உள்ளது. நீட் நுழைவுத் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு தர சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் உறங்கிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுகிறது.
முன்னேறிய விகுப்பினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு தரும் மத்திய சட்டம் பற்றி தமிழக அரசின் நிலை என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதியை தீர்த்துப்போக செய்து சாகடிக்கும் செயலை மத்திய பாஜக அரசு செய்கிறது. முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவது பற்றி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். சமூக நீதியை காப்பாற்ற தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய எ.வ.வேலு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது என கூறியுள்ளார். வடமாநிலத்தவரை தமிழகத்தில் குடியேற்றி சலுகை தரும் திட்டம் தான் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழகத்தில் பொதுவிநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U