👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கடைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப் படுகின்றன.அரசு ஊழியர்கள் உட்பட, வேலைக்கு செல்வோர், பொருட்கள் வாங்க வசதியாக, மாதத்தின், முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில், ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டது.
காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும், ரேஷன் கடைகள்
செயல்படுகின்றன.இரவு வரை, கடைகளை திறப்பதால், கொள்ளை சம்பவம் நடக்கிறது.பலர், ஞாயிற்றுக்கிழமைகளில், பொருட்கள் வாங்குவது இல்லை.இதனால், ஞாயிற்றுக் கிழமையை, விடுமுறை நாளாக அறிவிக்குமாறும், கடை நேரத்தை மாற்றுமாறும், ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்க, கூட்டுறவு துறைமுடிவு செய்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளை செயல் படுத்தும் பணி, தற்போது துவங்கியுள்ளது. அதன்படி, மாதத்தின் முதல், இரண்டு ஞாயிற்றுக்கிழமை களை, விடுமுறை நாளாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதை செயல்படுத்தும்பட்சத்தில், அனைத்து ஞாயிற்றுக்கிழமை களும் விடுமுறை நாளாகும். வெள்ளிக் கிழமை, வேலை நாளாகும்.மேலும், வேலை நேரத்தை, காலை, 9:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை; பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மாற்றி அமைக்கலாம் எனவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.இவை தொடர்பாக, உணவு வழங்கல் துறை ஆணையரிடம் ஆலோசித்து, ஊழியர்கள் நலன் கருதி, நல்ல முடிவு, விரைவில் அறிவிக்கப்படும். சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்திக்கு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.
இருப்பினும், அந்த நாட்களில், கிராம சபை கூட்டங்கள் நடப்பதால், ரேஷன் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். இனி, அந்த மூன்று நாட்களும் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு, வேறொரு நாள் விடுமுறை விடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U