👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை கவர, மக்கள் நீதி மையம் கட்சியினர் களமிறங்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில், மூன்றாவது இடம் பெற்ற, மக்கள் நீதி மையம் கட்சி, 2021ல் நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, வேலுார் தொகுதியில் போட்டியிட போவதில்லை என, அக்கட்சி முடிவு எடுத்துஉள்ளது.இந்நிலையில், தமிழக வாக்காளர்களிடையே கட்சி சின்னத்தையும், பெயரையும் நிலைநிறுத்த, மக்கள் நீதி மையம் சார்பில், சேவை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவு மற்றும் திருத்த பணிகளை, கட்சியினர் செய்து வருகின்றனர்.தற்போது, இளம் தலைமுறை மற்றும் பள்ளி மாணவ, மாணவியரை கவர, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி முகாமை நடத்த துவங்கியுள்ளனர்.
இதற்காக, சென்னை, எழும்பூர் பகுதியில், இரண்டு கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.மற்ற மாவட்டத்திலும், இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:திராவிட கட்சிகளுக்கு மாற்று, மக்கள் நீதி மையம் தான். அரை நுாற்றாண்டாக, இரட்டை இலையும், உதயசூரியனும் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளன. எங்கள் கட்சியை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அதற்காக, மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களின் குறைகளை, எங்கள் வழியாக எடுத்துச் செல்லும் போது, பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. எங்களுக்கான ஆதரவும் பெருகி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U