அரசு தேர்வு துறையில் ஆலோசகர் நியமனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

அரசு தேர்வு துறையில் ஆலோசகர் நியமனம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு தேர்வுத்துறை ஆலோசகராக, ஓய்வு பெற்ற இயக்குனர், வசுந்தராதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தேர்வுத்துறை சார்பில், பள்ளி பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், தொழில்நுட்ப தேர்வு, உதவி தொகைக்கான தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்த துறையின் இயக்குனராக, பல ஆண்டுகளாக பணியாற்றிய, வசுந்தராதேவி, மார்ச்சில் ஓய்வு பெற்றார். அவருக்கு, ஜூன் வரை, பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஜூலை முதல், இயக்குனர் உஷாராணி, தேர்வுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் பதவி உயர்வு பெற்று, ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், தேர்வுத் துறையில், இணை இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் இல்லை. எனவே, தேர்வுகள் நடத்தும் முக்கியமான, இந்த துறையின் தலைமை பொறுப்பில், உஷாராணியால் தனியாக செயல்படுவது சிரமம் என, பள்ளி கல்வித்துறை கருதியது. இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனருக்கு உதவும் வகையில், தேர்வுத்துறை ஆலோசகர் என்ற, புதிய பதவியை உருவாக்கியுள்ளது. அப்பதவியில், ஓய்வு பெற்ற வசுந்தராதேவியை நியமித்துள்ளது. அவர், தேர்வுகளை திட்டமிடுவது, நடத்துவது, கேள்வித்தாள் தயாரிப்பது, அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்.மேலும், பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த பயிற்சி அளிப்பது மற்றும் மாதிரி வினாத்தாள் தயாரிப்பது தொடர்பான பணிகளுக்கு, வசுந்தராதேவி ஆலோசனை வழங்குவார் என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது தேர்வுத்துறை ஆலோசகராக அத்துறையின் முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சுமார் ஒரு வாரங்களுக்கு முன்பாகத்தான் தேர்வுத்துறை இயக்குநராக இருந்த வசுந்தராதேவி ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு தற்போது அதே தேர்வுத்துறையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதிலும் பள்ளிக்கல்வித்துறை அந்த அரசாணையில் வெளியிட்டுள்ள முக்கியமான விவகாரம் என்னவென்றால் தேர்வுகளில் இந்த புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட பிறகு, அதிலும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமில்லாமல் தேர்வு நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. மேலும் இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் கண்காணிப்பதற்கு இதில் ஏற்கனவே அனுபவம் கொண்ட அதிகாரி இருப்பின் அது நல்ல முறையில் இருக்கும் என்பதன் அடிப்படையில் ஓய்வுப்பெற்ற அதிகாரியாக இருந்தவர் தற்போது ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆலோசகராக இருக்கும் அந்த நடைமுறை ஒரு புதிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து முக்கியமாக இந்த பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாமல் தேர்வு கேள்வித்தாள் அந்த நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே அந்த அனுபவம் இருந்த ஒருவர் தேர்வுத்துறைக்கு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. மேலும் இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் தொகுப்பு விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தரா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் ஓய்வு பெற்று ஒரு வாரமே ஆன நிலையில்வசுந்தரா தேவி, தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையில் அவர் மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளதால், அதனை உபயோகித்துக்கொள்ளும் பொருட்டு மீண்டும் அவருக்கு தேர்வுகள் துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews