இலவச மடிகக்ணினி தாமதம் ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

இலவச மடிகக்ணினி தாமதம் ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே, நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மடிகணினி வழங்கப்படுகிறது' என, அரசு சிறப்பு திட்ட செயலாக்க கூடுதல் முதன்மை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2017- - 18 மற்றும் 2018- - 19ல், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் மடிக்கணினி வழங்கவில்லை. அந்த மாணவர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து, அரசு சிறப்பு திட்ட செயலாக்க கூடுதல் முதன்மை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு, 15.53 லட்சம் மடிக்கணினிகளை, மாணவர்களுக்கு ஒதுக்கி உள்ளது
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முன்னுரிமை அளித்து வழங்குகிறோம் .இம்மாணவர்கள், ஜெ.இ.இ., - 'நீட்' போன்ற போட்டி தேர்வுக்கு தேவையான, வினா வங்கிகளை, 'கியூ.ஆர்.கோடு' மூலம் பதிவிறக்கம் செய்து, மடிக்கணினியில் படிக்கலாம். இதற்காகவே, முதல், இரண்டு கட்டங்களாக, அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் கட்டமாக, 2018 - - 19ல், பிளஸ் 2 முடித்தோருக்கும், நான்காம் கட்டமாக, 2017- - 18ல் முடித்தோருக்கும் வழங்கப்படும். எனவே, அந்த மாணவர்கள், போராட்டத்தை தவிர்க்குமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews