ஆசிரியர் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

ஆசிரியர் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆண்டுதோறும் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " 2013, 2014 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதி 82,000 பேர் பணி வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும், ஆண்டுதோறும் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பாடவாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படும் என குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 414 மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்றும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் கேட்டுக்கொண்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews