👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுமென்றால், 10% இடஒதுக்கீட்டை நிராகரிப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இடஒதுக்கீட்டை ஏற்போம் எனவும் சட்டப்பேரவையில் துணை முதலவர் விளக்கமளித்துள்ளார். நேற்றையதினம் 10% இடஒதுக்கீடு தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக,காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கவில்லை. கூட்டத்தின் போது 10% இடஒதுக்கீட்டிற்கு திமுக, திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.
கூட்டத்தின் முடிவில், இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் சட்டமன்ற கூட்டத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 69% இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அந்த இடஒதுக்கீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதி திராவிடர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வோம் என்றும் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக தமிழக அரசு 10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கும் முடிவை எடுக்கும் என்று கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U