👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் வொக்கேனசல் பிரிவு கலந்தாய்வில் 3 நாட்களில் 1,097 பேர் சீட் தேர்வு செய்துள்ளனர். ஜூலை 3ம் தேதி வரை இணையளத்தில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்ஜினியரிங் கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் நேற்று வரை சிறப்புப்பிரிவு, தொழிற்கல்வி (வொக்கேசனல்) பிரிவு இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக் வளாகத்தில் நடந்தது. நேரடி கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ் 101 மாணவர்கள் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின்கீழ் 121 பேருக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் 360 பேருக்கும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடந்த தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1,097 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை இணையவழி கலந்தாய்வு நடைபெற உள்ளது. 5 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு சீட் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் கல்லூரியில் சேர காலஅவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் சேராத இடங்கள் காலியிடங்களாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கலந்தாய்வு காலியிடங்களுடன் சேர்க்கப்படும். 5 சுற்று கலந்தாய்வு முடிந்ததும் ஜூலை 29ம் தேதி பிளஸ் 2 சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U