👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதிக்கு முறையான பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அறக்கட்டளை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்கள் மூலம், அறக்கட்டளையில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளின் வாடகையை பெற்று பலர் முறைகேடு செய்துள்ளனர். மேலும் அறக்கட்டளையின் கடிதம், செயலாளரின் கையொப்பம் உள்ளிட்டவைகளை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்த போது அலுவலகத்துக்குள் நுழைந்த சிலர் போராட்டம் நடத்தியதோடு, கண்டன முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர். இதனால் பணியாளர்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அறக்கட்டளை தொடர்பான வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறைகேடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம், அறக்கட்டளையின் அலுவலகம், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U