மாணவர்களிடையே ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி; எம்இ, எம்டெக் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 03, 2019

மாணவர்களிடையே ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி; எம்இ, எம்டெக் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார். இதன்மூலம், 2 நுழை வுத்தேர்வை எழுத வேண்டுமோ என மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ இடங் களை மட்டும் நிரப்புவதற்கு சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்போவ தாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் உள்ள இடங் களை நிரப்புவதற்கானடான்செட் நுழைவுத்தேர்வை நடத்தப் போவது யார், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது.பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகம், தமிழக உயர்கல்வித் துறை இடையே மோதல் போக்கு தொடங்கியது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் இருப்பார். 2019-20 கல்வி ஆண்டில் அதில் மாற்றம் செய்து, உயர்கல்வித் துறை ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி, மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை உயர்கல்வித் துறையும் ஏற்றுக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்தும் பொறுப்பு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. எனவே, பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கையைப் போன்று எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான ‘டான்செட்’ நுழை வுத் தேர்வையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்துமா அல்லது அண்ணா பல்கலைக் கழகமே தொடர்ந்து நடத்துமா, அண்ணா பல்கலைக்கழக கல்லூரி களில் சேருவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு, இதர கல்லூரிகளில் சேர இன்னொரு நுழைவுத் தேர்வு என 2 நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டுமா என்ற கேள்விகளும் எழுந்தன.இந்நிலையில், எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு தனித்தனி நுழை வுத் தேர்வுகள் இல்லாமல் வழக்கம் போல் ‘டான்செட்’ என்ற ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத் தியது. இதைத்தொடர்ந்து, ‘டான் செட்’ நுழைவுத் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் சுரப்பா கூறும்போது, ‘‘இந்த ஆண்டும் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படாது’’ என்றார்.இதையடுத்து, ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் ஓரிரு நாளில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு டான்செட் ((TANCET)) நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணா பல்கலைகழகத்தில் சேர்வதற்காக தனியாக AUCET நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2 தேர்வுகள் எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இதனை ஒரே தேர்வாக நடத்த வேண்டும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைகழகத்தை அறிவுறுத்தியது. இதுகுறித்து அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சுரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதுநிலை படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வு மட்டும் தான் நடத்தப்படும் என்றும் AUCET தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் துணை வேந்தர் சுரப்பா அறிவித்தார். மேலும் TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ப்ளான், எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஏற்கனவே டேன்செட்((TANCET)) நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், தனியாக AUCET என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.
இதனால் மாணவர்கள் 2 நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் உருவானது. இந்த குழப்பத்தை சரிசெய்ய ஒரே நுழைவுத்தேர்வு மட்டுமே நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்திய தமிழக உயர்கல்வித்துறை, முதுநிலை நுழைவுத்தேர்வை நடத்துவற்காக அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது தொடர்பாகவும், AUCET தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும் இந்த குழு ஆலோசிக்க உள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்தும் வகையில் திருத்தம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, வழக்கம்போல் ஒரே நுழைவுத் தேர்வை நடத்தவும், அதற்காக திருத்தம் வெளியிடவும் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு திருத்தம் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, உயர் கல்வித் துறை அதிகாரிகளின் கார்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்த நடைமுறையை நிறுத்தியது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை நிறுத்தியது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எடுத்தார்.
இதன் காரணமாக, அவருக்கும் தமிழக உயர் கல்வித் துறைக்கும் மோதல் போக்கு மூண்டது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவில் இணை தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 201920ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே நடத்துகிறது. பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, ஒருசில கட்டணங்களை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, கட்டண உயர்வுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது. இந்த தொடர் மோதல் போக்கு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 9 கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு தனியாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை (ஏயுசெட்) அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதற்கு மே 6 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைஅறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு டான்செட் என்ற ஒரே நுழைவுத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏயுசெட் அறிவிப்பால், இந்தப் படிப்புகளுக்கு இரண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலை உருவானது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்தத் தேர்வை நடத்தும் குழுவில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியது: தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என அண்ணா பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளது. இதற்காக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் வியாழக்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரும் பங்கேற்பார். ஏற்கெனவே உள்ளதுபோல டான்செட் என்ற பெயரிலேயே இந்த நுழைவுத் தேர்வை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் ஏயுசெட் தேர்வை அறிவித்ததால், அதை ரத்து செய்வதற்கு திருத்தம் ஒன்றும் வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வாக மீண்டும் டான்செட் தேர்வே நடத்தப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews