சிறகடிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

சிறகடிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'உயர்கல்வி சேர்க்கையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் மற்றும் பல்கலை மானியக்குழு, நடப்பு கல்வியாண்டில் உத்தரவிட்டு, அனைத்து பல்கலை மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கும், வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பியுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மூலம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் பிளஸ்2 தேர்வை, 16 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
முடிவில் முரண்பாடுஆண்டுதோறும் மாநில மற்றும் மத்தியபாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் முரண்பாடு நிலவியதால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர்.நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், கல்லுாரிகளின் மேலாண்மை பிரிவின் கீழ், அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்தாண்டு சீக்கிரம்நடப்பாண்டில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், தேர்வு முடிவுகள் ஒரு மாதம் முன்கூட்டியே வெளியாயின.
இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மத்தியில், தாங்கள் விரும்பிய கல்லுாரிகள், பாடத்திட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற பதட்டம் காணப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வழக்கத்தை விட முன்னதாக நேற்று முன்தினம்வெளியானது.தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பலர், கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர். பி.எஸ்.ஜி., கல்லுாரி முதல்வர் பிருந்தா கூறுகையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு,10 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் வழங்க, பல்கலை மானியக்குழு மற்றும் பல்கலையிலிருந்தும் வழிகாட்டு நெறிமுறைகள் முதன்முறையாக வந்துள்ளன.
அதன்படி, எங்கள் கல்லுாரியில் அனைத்து துறைகளிலும், மெரிட் அடிப்படையில், 10 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, மாணவர்களுக்கு விண்ணப்பம் வினியோகித்து வருகிறோம். பத்து நாட்களுக்கு பிறகு, அட்மிஷன் நடக்கும்,'' என்றார்.விரும்பிய கல்லுாரிகளில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா, கிடைக்காதா என்று பதைபதைத்து வந்த மாணவர்கள், இந்த புதிய மாற்றத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews