பணம் பெற்று படிப்பில் சேர்ப்பார்களாம் என்னங்க நியாயம் இது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2019

பணம் பெற்று படிப்பில் சேர்ப்பார்களாம் என்னங்க நியாயம் இது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு வேலைக்கு தகுதியற்ற படிப்புகள் என, 100 படிப்புகளை பட்டியலிட்டு, அரசாணை வெளியாகியுள்ளது. இப்படிப்பை தேர்வு செய்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு, யார் பொறுப்பேற்க போகிறார்கள் என, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில் படிப்புகளை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு, 33 படிப்புகள், தகுதியற்ற படிப்புகளாக அறிவிக்கப்பட்டன.தற்போது, 100 படிப்புகள் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தகுதியற்ற படிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த படிப்பை படித்து முடித்து சென்றுள்ள, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.கோவை பாரதியார் பல்கலையின் கீழ், 5 முதுநிலை படிப்புகள், 9 முதுநிலை படிப்புகளுக்கு இணையானது அல்ல என, அரசாணையில் தெளிவாகியுள்ளது.இப்படிப்புகள், கடந்த பல ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், படித்து முடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலையும், படித்துக்கொண்டிக்கும் மாணவர்களின் நிலைக்கும், பல்கலை நிர்வாகம் பொறுப்பேற்குமா என்றால் கேள்விக்குறியே. இதுபோன்ற சிக்கல் இருப்பது தெரிந்தும், பல்கலைகள் தொடர்ந்து புதிய பாடப்பிரிவுகளை துவக்குவதும், கல்லுாரிகளுக்கு அனுமதியளிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.ஆண்டுதோறும் தகுதியற்ற படிப்புகளை வெளியிடும் அரசு, அதை நடத்த தடை விதிக்காமலும், நடத்தும் பல்கலை, கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமலும், இருப்பது ஏன் என்றும் கேட்கின்றனர்.
கல்வியாளர் வனிதா கூறுகையில், தகுதியற்ற பாடத்தை நடத்திய பல்கலை, கல்லுாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், பட்டியல் வெளியிடுகிறது அரசு. ஒரு பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் முன்பே, அரசின் ஒப்புதல் பெற வேண்டியதை கட்டாயமாக்காவிடில், இதுபோன்ற சிக்கல் தொடரும்,'' என்றார்.பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், இது தொடர்பாக, அரசுக்கு மீண்டும் பல்கலை தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்படும். பல்கலை சக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, உரிய முடிவுகள் எடுக்கப்படும். படித்து முடித்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களுக்கு என்ன தீர்வு என தீர்மானிக்கப்படும்,'' என்றார்.
பாரதியார் பல்கலையில்தகுதியற்ற படிப்புகள்-எம்.எஸ்சி., கணிதம் - எம்.எஸ்சி., புள்ளியலுக்கு இணையில்லைஎம்.எஸ்சி., அப்ளைடு மைக்ரோ பயாலஜி- எம்.எஸ்சி., விலங்கியலுக்கு இணையில்லை.எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரி பயோ டெக்னாலஜி- எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல், எம்.எஸ்.சி., விலங்கியல், எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி, எம்.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி ஆகிய நான்கு படிப்புகளுக்கு இணையில்லை.எம்.எஸ்சி., நானோ அறிவியல் டெக்னாலஜி படிப்பு எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி., இயற்பியலுக்கு இணையில்லை.பி.ஏ., பி.எட்., நான்காண்டு ஒருங்கிணைந்த படிப்பு, பி.எட்., படிப்புக்கு இணையில்லை.இவ்வாறு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews