பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2019

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு, வரும் திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூன் 14 முதல் 22-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவோ அல்லது தேர்வு மையங்கள் வாயிலாகவோ ஆன்-லைன் மூலமாக வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்திலேயே வெளியிடப்படும். அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம்பெற்றிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews