ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு 17ல் பயிற்சி, - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு 17ல் பயிற்சி,

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு, வரும் 17ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது' என, கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கிறது. கடலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பெரியார் அரசு கல்லுாரியில் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது;ஓட்டு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்படுவார். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, வி.வி. பாட் இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 5 வி.வி.பாட் இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இ.வி.எம், இயந்திரத்தில் பதிவான அளவிற்குத்தான் வி.வி. பாட்டிலும் பதிவாகி இருக்க வேண்டும். வித்தியாசம் இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும்.ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு 17ம் தேதி பயிற்சி அளிக்கப்படும். அப்சர்வர் விரைவில் வருவார். ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கவுண்டிங் அசிஸ்டன்ட், ஒரு கவுண்டிங் சூப்ரவைசர் இருப்பர். தபால் ஓட்டுக்கள் 23ம் தேதி காலை 8:00 மணிக்கு எண்ணப்பட்டு, 8:30 மணிக்கு முடிக்க வேண்டும். இல்லை என்றாலும் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை துவங்கி விடும். இதுவரை 70 சதவீத தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. மறு ஓட்டுப் பதிவுதிருவதிகையில், 210ம் எண் ஓட்டுச்சாவடியில், கடந்த ஏப்., 18 ம் தேதி நடைபெற்ற ஓட்டுப்பதிவை ரத்து செய்து விட்டு, வரும் 19ம் தேதி மறு ஓட்டுப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளோம்.
இந்த செய்தியை வி.ஏ.ஓ., அலுவலகம், நகராட்சி அலுவலக வார்டு பகுதிகளில் ஓட்டியுள்ளோம். மறு ஓட்டுப் பதிவு தகவல் குறித்து தண்டோரா மூலம் அப்பகுதியில் தெரிவித்துள்ளோம்.பண்ருட்டி தொகுதியில் ஏப்., 18ம் தேதி ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தியது போக, ரிசர்வில் உள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ரேண்டம் முறையில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர்கள் மீண்டும் அப்பகுதியில் பிரசாரம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதுவரை எந்த தகவலும் இல்லை.அங்கு மொத்தம் 312 ஆண் மற்றும் 345 பெண் வாக்காளர்கள் என 657 பேர் உள்ளனர். ரிசர்வில் உள்ள ஓட்டுச் சாவடி அலுவலர்களும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படுவர். கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். ஓட்டுப் பதிவு முடிந்து, இயந்திரங்கள் கடலுார் கொண்டு வரப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews