👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
செஞ்சி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தாய், மகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் செஞ்சியில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மகள் கயல்விழி செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இவரது தாய் சுசீலா (36), தனித்தேர்வராக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் கடந்த 29ம் தேதி வெளியானது. இதில் தாய், மகள் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கயல்விழி 382 மதிப்பெண்ணும், அவரது தாய் சுசீலா 265 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு வரை படித்து இடைநின்ற சுசீலா, 15 வருடம் கழித்து தனித்தேர்வராக ஒரே முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தற்போது மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறேன். 10ம் வகுப்பு படித்திருந்தால்தான் மகளிர்குழு தலைவியாக முடியும். அப்போதுதான் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து வைராக்கியத்துடன் 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இது என்னுடைய நம்பிக்கை, விடா முயற்சியால் கிடைத்த வெற்றி என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U