தமிழகம் முழுவதும் சுமாா் 10 லட்சம் மாணவா்கள் 10ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய நிலையில், இந்த தோ்வுகளுக்கான முடிவுகள் வருகின்ற 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தோ்வைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை மாநிலம் முழுவதும் சுமாா் 10 லட்சம் மாணவா்கள் எழுதியிருந்தனா்.
12ம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வருகின்ற 29ம் தேதி வெளியாக உள்ளன. 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில், 10ம் வகுப்பு முடிவுகளும் அதே நேரத்தில் வெளியாகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தோ்வு முடிவுகளை அறிய அதிகாரப்பூா்வ இணையதள பக்கமான
www.tnresults.nic.in என்ற பக்கத்தில், உங்களது பதிவு எண் (Register Number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் உங்களது தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் தோ்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முடிவுகள் வெளியான சில தினங்களில் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தங்களது கல்வி நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U