SSA:பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 17, 2019

SSA:பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கிருஷ்ணகிரியில் பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
இப்பணி வருகிற மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி தலைமையில் கிருஷ்ணகிரியில் அண்ணா நகர் பகுதியில் துவங்கி, ரயில்வே காலனி, பூந்தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு, பெரியசாமி தெரு, சென்னை சாலை, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 0 முதல்18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளையும் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியானது காலை 7 மணி முதல் துவங்கப்பட்டு 614 வயதில் 8 குழந்தைகளையும், 1518 வயதில் 11 குழந்தைகளையும், 018 வயதில் 21 மாற்றுத்திறன் குழந்தைகளையும் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.
இக்கணக்கெடுப்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர். இக்கணக்கெடுப்பு பணி மூன்று குழுக்களாக பிரிந்து 360 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுத்து, கண்டறியப்படும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உரிய ஆலோசனை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews