பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் ஆண்கள் வேலையிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 17, 2019

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் ஆண்கள் வேலையிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிக்காரணமாக இந்தியாவில் 50 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் வேலை செய்யும் இந்தியாவின் நிலை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் ஆண்கள் வேலையை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள் அனைவரும் சமூகத்தின் பாதிக்கப்பட கூடிய பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை இழப்பானது இந்திய பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் நிலையற்ற பொருளாதார தன்மையும் மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான கொள்கை முடிவுகளுமே வேலை இழப்பிற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு குழுவின் தலைவரான பேராசிரியர் அமித் பசோல் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக கூறப்படும் புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews