மே இறுதியில் சிபிஎஸ்இ(CBSE) தேர்வு முடிவுகள்: நிர்வாகம் முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

மே இறுதியில் சிபிஎஸ்இ(CBSE) தேர்வு முடிவுகள்: நிர்வாகம் முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிட அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளை சேர்ந்த சுமார் 31 லட்சம் மாணவ- மாணவியர் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களுக்கு ஏப்ரல் 4ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்தன.
இந்த தேர்வுகளில் நாடுமுழுவதும் பங்கேற்றவர்களில் 18 லட்சத்து 1000 பேர் மாணவர்கள், 12 லட்சத்து 9 ஆயிரம் பேர் மாணவியர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதி வாரத்தில் வெளியிடுவது என சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை ெவளியிட்டுவிட்டு, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணைய தளமான cbse.nic.in, மற்றும் cbseresults.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14ம் தேதி முதல் நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்காத ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி, சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ எடுத்த கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
1 கோடியே 70 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி மே முதல் வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுதியுள்ளவற்றில் சரியான விடை, கேள்விக்குரிய விடையோடு தொடர்புடைய விடை எழுதியிருந்தாலும், தாங்களே யோசித்து பொருத்தமான விடையை எழுதியிருந்தாலும் அதற்கு முன்னுரிமை கொடுத்து மதிப்பெண் போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்க முதல் முறையாக இந்த ஆண்டு செல்போன் செயலிகளை(Apps)சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க முடியும் என்று செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews