👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் அரசு கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்ட உறுப்புக் கல்லுாரிகளில் ஏற்கெனவே பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும்&' என உறுப்பு கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்கலைகளின் கீழ் இயங்கும் 41 உறுப்புக் கல்லுாரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக மாற்றி அரசு அறிவித்தது. முதற்கட்டமாக மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, கோட்டூர் உட்பட 14 உறுப்பு கல்லுாரிகள் அரசு கல்லுாரியாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&'இதற்கான நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அல்லது பணிமாறுதல் மூலம் நியமிக்கப்படும்&' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, ஏற்கெனவே பல ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர் நலனுக்கு எதிரானது என சர்ச்சை எழுந்தது.இதுகுறித்து சங்க மாநில தலைவர் கதலி நரசிங்க பெருமாள் கூறியதாவது: அரசு உத்தரவில் உறுப்புக் கல்லுாரிகள் துவங்கப்பட்டபோது இருந்த அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்படும்.
தற்போது உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் 80 சதவீதம் ஆசிரியர் ஏற்கெனவே பி.எச்.டி., அல்லது நெட்/செட் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேல் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் பணியாற்றுகின்றனர். அரசு கல்லுாரியாக்கப்பட்டால் இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என அரசிடம் பலமுறை வலியுறுத்தினோம். அரசும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அரசு வெளியிட்ட உத்தரவில் அது இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை என்றார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்