கோவை கல்லுாரி மாணவி கழுத்தறுத்து கொலை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

கோவை கல்லுாரி மாணவி கழுத்தறுத்து கொலை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

கோவை அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சேர்ந்த பிரகதி ( 20 ) கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிப்பட்டி என்ற இடத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி என உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியை கழுத்தை அறுத்து மர்ம நபர் கொலை செய்துள்ளதாகவும், அவர் அணிந்திருந்த நகை அப்படியே உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டரா அல்லது காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews