அரசாணை வெளியிட்டும் தேர்தலுக்கான பிரத்யேக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

அரசாணை வெளியிட்டும் தேர்தலுக்கான பிரத்யேக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் அதிகாரிகள், சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை மீறி வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தெடார்ந்து, அந்த இடமாறுதல் உத்தரவுகள் திருப்பப்பெறப்பட்டு, அதே பணியிடங்களில் நியமிக்கப் பட்டனர்.

இதற்கிடையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கடந்த மார்ச் 28-ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில், தேர்தல் பணிகளுக்காக பல்வேறு பணியிடங்களை தோற்றுவித்து, அதற்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதில், குறிப்பிட்ட சில பணியிடங்கள் வரும் மே 31-ம் தேதி வரையும் சில பணியிடங்கள் ஜூன் 31-ம் தேதி வரையும் அமலில் இருக்கும். ஆனால், அரசாணை வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை பெரும்பாலான பிரத்யேக பணியிடங்களில் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.கே.சிவகுமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் மனு அளித்துள்ளார்.
பணிச்சுமை:

அதில், ‘அரசாணை வெளியிட்டு தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் பிரத்யேக பணியிடங்கள் நிரப்பப்படாததால், தேர்தல் பணியுடன், மாவட்ட நிர்வாக பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறை அலுவலர்கள், மக்கள் பணி மற்றும் தேர்தல் பணி என பணிச்சுமையில் சிக்கியுள்ளனர்.

தேர்தலுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் ஆணையம் இழுத்தடித்து வருவதும் வேதனைக்குரியதாகும். எனவே, நேர்முக உதவியாளர் (தேர்தல்) உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தவறும்பட்சத்தில், ஏப்ரல் 8-ம் தேதி மாலை கோட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews