👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
குஜராத், சரஸ்பூரில் உள்ள பள்ளி கட்டிடத்தை தேர்தலுக்கு பயன்படுத்திய பின்னர், அதே நிலையில் திருப்பி வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. குஜராத்தில், சரஸ்வதி வித்யா மண்டல் அமைப்பு சரஸ்பூர் பகுதியில் சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியை 75 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது இந்த பள்ளியிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அப்போது தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் பள்ளியில் ஒட்டப்பட்டன. தேர்தல் முடிந்ததும், தேர்தல் ஆணையம் பள்ளியை ஒப்படைத்த போது எதையும் அகற்றாமல் அப்படியே ஒப்படைத்து விட்டனர்.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தட்டிக் கேட்ட போது, பள்ளி நிர்வாகம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி பள்ளி டிரஸ்டி ஜோதிந்தரா தேவ் கூறியதாவது:2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி டிரஸ்டின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடிய போது, பள்ளி முழுவதும் பெயின்ட் அடித்தோம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்