22,256 பேராசிரியர்களை வீட்டுக்கு அனுப்பிய பொறியியல் கல்லூரிகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

22,256 பேராசிரியர்களை வீட்டுக்கு அனுப்பிய பொறியியல் கல்லூரிகள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
2019-20ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 557 பொறியியல் கல்லூரிகளில் 63,501 பேராசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2,81,511 மாணவர்களும் உள்ளனர். 2017-18ல் 596 கல்லூரிகளில் 85,757 பேராசிரியர்களும் அவர்களின் கீழ், 3,20,090 மாணவர்களும் இருந்தனர்.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஓராண்டில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) இந்தியாவில் அனைத்து பொறியியல் கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பு பேராசிரியர் - மாணவர் விகிதத்தில் தளர்வை அறிவித்ததாலும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாலும் 22,256 பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கடந்த 2018ஆம் ஆண்டில் வேலை இழந்துள்ளனர். இதனால் ஏற்கெனவே மோசமாக இருக்கும் தமிழக பொறியியல் கல்லூரிகள் மேலும் தரம் தாழ்ந்துபோகும் அபாயம் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை குறையும் நேரத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பேராசிரியர்கள் வேறு வேலையைப் பிடிக்க வழி தெரியாமல் உள்ளனர். சிலர் குறைந்த ஊதியத்துக்கு கிடைக்கும் வேலைக்குச் செல்ல துணிகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக ஆவணங்களிலிருந்து கிடைக்கும் தகவலின்படி, 2019-20ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 557 பொறியியல் கல்லூரிகளில் 63,501 பேராசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2,81,511 மாணவர்களும் உள்ளனர். 2017-18ல் 596 கல்லூரிகளில் 85,757 பேராசிரியர்களும் அவர்களின் கீழ், 3,20,090 மாணவர்களும் இருந்தனர்.
2017 டிசம்பரில், ஏஐசிடிஇ மாணவர் - பேராசிரியர் விகிதத்தை 1:15 என்பதிலிருந்து 1:20 என மாற்றியது. 2018-19 முதல் இந்த புதிய விகிதம் அமலானது. அதாவது 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற நிலை மாறி, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர பொறியில் கல்லூரிகள் நிதி சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல பேராசிரியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. "ஏஐசிடிஇ மாணவர் - பேராசிரியர் விகிதத்தை தளர்த்திய உடனேயே 80 பேராசிரியர்களில் 45 பேரை சம்பளம் கொடுக்காமல் நீக்கிவிட்டனர்." என பாதிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.

ஏஐசிடிஇ பணியில் இருக்கும் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிருத்திருந்தாலும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே மாதச் சம்பளம் அளிக்கப்படுகிறது எனப் புகார் நிலவுகிறது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews