தண்ணீர் தாகம்., தோழி வைத்திருந்த பாட்டில் நீரை அருந்திய பின் வந்த வாந்தி.! பதறிய ஆசிரியர்கள்., இறுதியில் நேர்ந்த சோகம்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 09, 2019

தண்ணீர் தாகம்., தோழி வைத்திருந்த பாட்டில் நீரை அருந்திய பின் வந்த வாந்தி.! பதறிய ஆசிரியர்கள்., இறுதியில் நேர்ந்த சோகம்.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா(11) நேற்று மதியம் வகுப்பறையில் சக மாணவியின் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்துள்ளார் . அதனை குடித்த சிறிது நேரத்தில் பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு ஓடிச் சென்று வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி அருகிலிருந்த ஆசிரியர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் பள்ளிக்கு விரைந்து விசாரணை நடத்தினர். உடனடியாக தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். பள்ளிக்கு விரைந்த நிபுணர்கள், மாணவி தூக்கி எறிந்த பாட்டிலை சோதனை செய்தனர். அந்த பாட்டிலில் இருந்து வெளிப்பட்ட தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது. இதையடுத்து அது ஆசிட்டாக இருக்கலாம் என கூறியுள்ளனர். உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews