பள்ளி மாணவர்களுக்காக நடந்த மாதிரி தேர்தல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

பள்ளி மாணவர்களுக்காக நடந்த மாதிரி தேர்தல்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
புதுச்சேரி ஆரோவில்லில் தொண்டு நிறுவனப் பள்ளி மாணவர்கள் மாதிரி தேர்தலை நடத்தி, வெற்றி பெற்றவர்களை அறிவித்துள்ளனர். புதுச்சேரி அடுத்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் 'இசை அம்பலம்' என்ற பெயரில் தொண்டு நிறுவன பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 8 ம் வகுப்பு வரை உள்ளது. ஒரு வகுப்புக்கு 15 பேர் மட்டுமே அனுமதி. இங்கு தற்போது 135 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அனுபவ கல்வியே அளிக்கப்படுகிறது. தற்போது தேர்தல் சமயம் என்ப தால் பள்ளியில் தேர்தல் நடத்தி மாணவர் களுக்கு நேரடி விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி முதல்வர் சஞ்சீவ் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் பணியை மாணவர்களிடமே ஒப்படைத்தனர். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பள்ளி மாணவர்களில் ஒரு குழுவினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக் கப்பட்டு, தேர்தல் பணிகள் துவங்கின. அனைத்து மாணவர்கள், ஆசிரியர்க ளுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நடந்தது.
வெள்ளை மலர் கட்சி, கல்வி மலர் கட்சி என்ற இரு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 7 தொகுதி களுக்கு தேர்தல் நடந்தன. பள்ளி முழுவதும் ஆதரவு கேட்டு போஸ்டர், பேனர்களும் ஓட்டப்பட்டு இருந்தன. தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாணவர் களே தயார் செய்தனர். இதற்கான சாப்ட் வேர் எழுதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயார் செய்யப்பட்டது. இதில் 2 கட்சிகள், நோட்டாவுக்கு வாக்குப்பதிவு செய்ய பொத்தான்கள் இருந்தன. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் லேப்டாப் ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு பள்ளி வளாகத்தில் நடந்தது. வாக்குப்பதிவுக்கு வரும் மாணவர்க ளின் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கையில் மை வைத்து வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, மறைவான இடத்தில் உள்ள இயந்திரத்தில் தங்களின் வாக்குகளை மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவு எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றார்கள் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த மாதிரி தேர்தல் குறித்து ஆசிரியர் சிவா கூறுகையில், "தேர்தலில் வெற்றி அறிவிக்கப்பட்டு அதில் வென்றோர் முதல்வர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் மூலம் விதிமுறைகள் தொடங்கி தேர்தல் தொடர்பான அனைத்து விவரங் களையும் இக்குழந்தைகள் அறிந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்,வாக்கு எண்ணிக்கை ஆகியவை குறித்து 12 வயதிலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வும் நேரடி பயிற்சியும் கிடைத்திருப்பது தான் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி. " என்றார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களுக்காக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews