👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கணினி அறிவு என அனைத்திலும் ஜொலிக்க முடியும். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தருவார். கல்வியில் சாதிக்க பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம் இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனை செய்வார்கள். 5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்வார்கள். தடையை கடக்க பரிகாரம் 2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது.
ராகு கேது திசைகளில் பாதிப்பு சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் எண்ணம் குறைந்து விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும். குருவின் நிலை உங்கள் பிள்ளைகள் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி,உச்சம்,நட்பு என்ற நிலையில் இருந்தால் குருவின் ஆதிக்கம் உள்ள ஜாதகம்.
எந்த துறையில் நிபுணர் ஜாதகத்தில் குரு சூரியன் இணைய மருத்துவம்,எலக்ட்ரிக்கல்,சோலார் எனர்ஜி,தத்துவம்,ஏரோநாட்டிக்,படிக்க வெற்றி உண்டு,பெலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குரு சந்திரன் கூட்டணி அமைந்தால் மனோதத்துவம், மெரைன், ரசாயனம்,உணவுத்துறை,ஆயில்,ஆய்வகத்துறை சார்ந்த கல்வி கற்க வேலை அமையும். வங்கியில் வேலை செய்யலாம்
ஜாதகத்தில் குரு செவ்வாய் இணைந்திருந்தால் புள்ளியியல்,நிலஅளவியல்,விஏஓ,ஆர்,அறிவியல்,சிவில்துறை,உடற்கல்வித்துறை, விவசாயம்,கட்டுமானத்துறை,பிபார்ம்,டிபார்ம் ஆகியன படிக்க வெற்றி உண்டு. குருவும் புதனும் இணைய வங்கிப்பணி,கணித ஆசிரியர், ஆடிட்டர், வருமான வரித்துறை,ஊடகத்துறை,பேச்சாளர்,எழுத்தாளர், சிற்பக்கலைஞராக ஆக வாய்ப்பு உண்டு.
குருவுடன் சனி கூட்டணி ஜாதகத்தில் குரு சனி கூட்டணி போட்டு அமைந்திருந்தால் பூமிக்கு கீழேஉள்ள தாதுக்கள்,ஆயில்,சார்ந்த ஆய்வகப் படிப்பு படிக்கலாம்,பண்ணை,கால்நடை சார்ந்த படிப்புகள் வெற்றி தரும். குரு ராகு இணைய எலக்ட்ரானிக்ஸ்,சிமென்ட், ஓடு, டைல்ஸ், ஏரோநாட்டிக்ஸ்,விண்வெளி ஆய்வு கல்வி பலன் தரும். குரு உடன் கேது இணைய ஏற்றுமதி, இறக்குமதி, தத்துவம், மருத்துவம்,சார்ந்த கல்வி படிக்க வைக்கலாம்.
சினிமா துறை படிப்பு குரு சுக்கிரன் இணைய, நேருக்கு நேர் பார்த்தால் கேட்டரிங், காஸ்மெட்டிக், ஆடைவடிவமைப்பு, கார்மென்ட்ஸ்,ஆபரணம், புட் ப்ராசசிங்,பால் பண்ணை, வெட்னரி, அழகுகலை, சினிமா, ஊடகத்துறை,விசுவல் கம்யூனிகேசன் சார்ந்த கல்வி படிப்பு வெற்றியைத் தரும்.
விநாயகரை வணங்க நன்மைகள் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஞாபகசக்தி அதிகரிக்க காலையில் விநாயகரை வணங்கி அகவல் படிக்கலாம். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வணங்க வேண்டும். மதுரை மீனாட்சி புதன் பரிகார தலமாகும். புதன்கிழமை பிள்ளைகளை அழைத்துச்செல்லலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். பெருமாளையும் புதன்கிழமைகளில் வணங்கலாம். திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்க நன்மைகள் நடக்கும். கூத்தனூர் சென்று கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்