பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்; சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்; சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சேலத்திலும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்'கில் பரப்புவோம் என மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பல் போலீசில் சிக்கியது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்தள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சேலத்திலும் பொள்ளாச்சியை மீறும் வகையில் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா 25. இவரது உறவினர் சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த மோகன சுந்தரம் 25. இருவரும் 22ம் தேதி இரவு 12:00 மணிக்கு பவானிக்கு பைக்கில் சென்றனர். வழியில் சேலம் பட்டர்பிளை பாலம் அருகே ஒரு கும்பல் வழிமறித்து பவித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது. அவரது புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார் புத்துாரை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் காதலர்களுடன் இரவு நேரங்களில் வரும்போது பட்டர்பிளை மேம்பாலம் அருகே சிலர் வழி மறித்து காதலர்களை துரத்தி விட்டு மாணவியரை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்து ஆபாச படம் எடுத்தது தெரியவந்தது.
அந்த காட்சிகளை அலைபேசியில் படம் பிடித்து 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்கில் பரப்புவோம்' எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். மல்லுார் சீலநாயக்கன்பட்டி கொண்டலாம்பட்டி அரியானுாரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வசதியான பெண்களிடம் நகை பணத்தை கறந்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான புத்துாரை சேர்ந்த மணிகண்டன் 31 என்பவனை பவித்ராவிடம் நகை பறித்த வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவனது கூட்டாளிகள் மூவரை வேறொரு வழக்கில் கைது செய்து கணக்கு காட்டி உள்ளனர். இந்த கும்பல் மூன்று ஆண்டுகளாக பல பெண்களை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக போலீசார் செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேரை மட்டுமே கைது செய்து பலாத்காரம் மிரட்டி பணம் பறித்த சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர்.
அம்பலமானது எப்படி? பவானி இளம்பெண் பவித்ரா உறவினர் மோகனசுந்தரத்தை காதலித்து வந்துள்ளார். இருவரும் பவானிக்கு பைக்கில் சென்ற போது பட்டர்பிளை பாலத்தின் அருகே நிறுத்தி பேசியபடி இருந்துள்ளனர். இதை பார்த்த கும்பல் காதலர்களிடம் வந்து மிரட்டல் விடுத்துள்ளது. கத்தி முனையில் பவித்ராவை மிரட்டிய மணிகண்டன் 'முத்தம் கொடு' என கேட்டுள்ளான். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அது மட்டுமின்றி 'என்னுடன் ஜாலியாக இருந்தால் விட்டு விடுகிறேன்' எனவும் கூறியுள்ளான். அதற்கு சம்மதிக்காத அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள தான் அணிந்திருந்த 5 சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews