வாணியம்பாடியில் போதை பொருட்களை உட்கொண்ட 7-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மயக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

வாணியம்பாடியில் போதை பொருட்களை உட்கொண்ட 7-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மயக்கம்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வாணியம்பாடியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்ட 7-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மயங்கி விழுந்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வேலூர் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் தடையின்றி கிடைப்பதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் பெட்டிக்கடை, தேநீர்கடை, சாலையோர சிறுகடைகளில் பகிரங்கமாக விற்பனை செய்யப் படுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல் துறையினர் மெத்தனமாக இருப்பதால், இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி யில் போதைப் பொருட்களை உட்கொண்ட 7-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் மசூதி உள்ளது. அதன் எதிரே நகராட்சி முஸ்லிம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் அருகாமையில் வணிக வளாகம், அதன் அருகே பெட்டிக்கடைகள் உள்ளன.

பள்ளி உணவு இடைவேளை நேரத்தில் வெளியே வரும் மாணவர்கள் பெட்டிக்கடைக்கு சென்று தங்களுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் இடைவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் பள்ளிக்கு திரும்பினர். பின்னர் வகுப்பு தொடங்கியவுடன் 5 மாணவர்களும் திடீரென ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து மாணவர்களை மீட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்தில் 2 மாணவர்களுக்கு மயக்கம் தெளிந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான (ஹான்ஸ், பான்பராக்) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 5 மாணவர்களும் உட்கொண்டது தெரியவந்தது. பின்னர், அவர்களது சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டில் ஹான்ஸ், பான்பராக் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்டு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பெற்றோர் முன்னிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டோம் என மாணவர்களிடம் உத்தரவாதம் பெற்று எழுதி வாங்கிக் கொண்டனர். பின்னர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முரளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் பள்ளிக்கு அருகாமையில் இருந்த பெட்டிக்கடைகளில் சோதனையிட்டு, அங்கிருந்து பல ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்


Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews