28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 29 செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட் இன்று(ஏப்.,01) காலை விண்ணில் பாய்கிறது. இதற்கான 27 மணி நேர 'கவுன்ட்டவுன்' நேற்று துவங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்கிறது. ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்களும் பார்க்கும் வகையில், ஏவுதளங்களில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், ஸ்டேடியம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5,000 பேர் அமரலாம். நம் நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே, இதை பார்க்க அனுமதி அளிக்கப்படும்.
தற்போது, பாதுகாப்பு தொடர்பான ஆய்விற்காக, 'எமிசாட்' என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட், நாளை காலை, 9:30 மணிக்கு, விண்ணில் பாய்கிறது.எமிசாட் உடன், வணிக ரீதியிலாக, அமெரிக்காவை சேர்ந்த, 24; லித்துவேனியா நாட்டின், இரண்டு; சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் நாடுகளின், தலா, ஒன்று என, மொத்தம், 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews