👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

தமிழகத்தில் நடக்கவுள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்து ஆணையம் வெளியிட்ட புத்தகத்தில் ஏப்ரல் 23ம் தேதி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் ஏப்ரல் 18ம் தேதிதான் தேர்தல் என்று அறிவித்துள்ளது குளறுபடியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், பீகார், கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 34 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதில், பீகாரில் இரண்டு தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11 மற்றும் 19ம் தேதியும், கோவாவில் 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ம் தேதியும், குஜராத்தில் 2 தொகுதிகளுக்கு 23 தொகுதியும், மத்தியபிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு 29ம் தேதியும், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 11ம் தேதியும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 18ம் தேதியும், உத்தரபிரதேசத்தின் ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 29ம் தேதியும், மேற்குவங்கத்தின் 2 தொகுதிக்கு ஏப்ரல் 29 மற்றும் மே 6ம் தேதியும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. மேலும், ‘தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இப்போது நடத்தவில்லை’ என்று தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர், ஒசூர் ஆகிய 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். அதுபோல் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்ட 114 பக்க அறிவிப்பில், கடைசி பக்கத்தில் 34 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்ரல் 23ம் தேதி என்று அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுடன் 18 சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
18 தொகுதிக்கும் 3ம் கட்டமாக நடக்கும் 23ம் தேதிக்கு பதில், இரண்டாம் கட்டமாக நடக்கும் 18ம் தேதிக்கு திடீரென மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில், ‘‘18 சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதிதான் இடைத்தேர்தல் நடக்கும். ஆணையம் வெளியிட்ட புத்தகத்தில் தவறாக பிரிண்டிங் செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்