பொதுத் தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 23, 2019

பொதுத் தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொதுத் தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. அதில் பிளஸ்2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிகிறது. பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதியில் முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.
மேற்கண்ட தேர்வுகளில் பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் காலையில் நடப்பதற்கு பதிலாக மதியம் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 3740, பிளஸ் 1 தேர்வுக்கு 2912, பிளஸ் 2 தேர்வுக்கு 2941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேற்கண்ட தேர்வுகளுக்காக கூடுதலாக 700 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதையடுத்து மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் 14, 18, 20, 22 தேதிகளில் அந்த தேர்வு மையங்களில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews