திருமங்கலம் ஆசிரியைகளின் அசத்தல் ஐடியா ஆடிப்பாடு... வரும் வாய்ப்பாடு
திருமங்கலம் அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதாக மனப்பாடம் செய்வதற்காக வாய்ப்பாடை ஆசிரியைகள் நடனமாடிய படி சொல்லி தருகின்றனர்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 248 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்
இங்கு மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த பல ஐடியாக்களை புகுத்துகின்றனர். அதில் ஒன்றுதான், கணித வாய்ப்பாட்டை நடனம் ஆடியபடியே மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தருவது. இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், இந்த நடன வாய்ப்பாடு பயிற்சியை தலைமையாசிரியர் சாந்தி, கணித ஆசிரியை சத்தியவர்ஷா சொல்லி தருகின்றனர். இதன்படி தினமும் 2ம் வாய்ப்பாடு முதல் 11ம் வாய்ப்பாடு வரையில் மாணவ, மாணவிகள் நடனம் ஆடியபடியே மனப்பாடம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வாய்ப்பாட்டிற்கும் ஒரு நடனமாம்...
இதனால் மாணவர்கள் எளிதாக மனப்பாடம் செய்து விடுகின்றனராம்... கணிதத்திலும் அதிக மதிப்பெண் எடுத்து அசத்துறாங்களாம். ஆச்சரியமாக இருக்குல்ல...! தலைமையாசிரியை சாந்திகூறுகையில் ‘‘ நடனம் ஆடும்போது அவர்களுக்கு உடற்பயிற்சியும் கூடுதலாக கிடைக்கிறது. ,’’ என்றார். மாணவியர்கள் கூறுகையில், ‘‘நடனம் மூலமாக மனப்பாடம் செய்வதால் எங்களுக்கு வாய்ப்பாடு மீதிருந்த அச்சம் நீங்கி விட்டது,’’ என்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்