BREAKING NEWS: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் போராட்டம் : ஜாக்டோ-ஜியோ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 30, 2018

BREAKING NEWS: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் போராட்டம் : ஜாக்டோ-ஜியோ

சென்னையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளை கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில்  ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்' எவ்வித கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை;முதல்வர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை; உயர்மட்டக்குழுவில் நாளை விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும்;7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் போராட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,'இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சுமார் 3 மணி நேரம் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews