வேலூர் மாவட்டம் திமிரி அருகே, அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆற்காட்டை அடுத்த காவனூர் செல்லும் சாலையில் மினர்வா வித்யா மந்திர் என்ற பெயரில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அதனை பூபாலன் என்பவர் நடத்தி வந்தார்.
அப்பள்ளியில் 60 குழந்தைகள் வரை படித்து வந்த நிலையில், வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதி புதுப்பிக்கப்படாமல் பள்ளி செயல்பட்டு வந்ததும் , தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் நடத்தப்பட்டு வந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் நிலைதன்மை இல்லாமல் இருப்பதும் தெரியவந்ததையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அப்பள்ளியில் பயின்று வந்த 60 குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்