சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும், உதவி பெறா தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது
சிறுபான்மையின நல அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு வகுப்பறை, அறிவியல் கூடம், கழிப்பறை, குடிநீர், மகளிர் விடுதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி அளிக்கப்படுகிறது
இத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் கோரும் மதிப்பீட்டுத் தொகையில் (75 சதவீதம் வரையில்) ரூ. 50 லட்சத்திற்கு மிகாமல் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் கல்வி நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இத் திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதிகள், விண்ணப்பங்களை
www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்
இத் திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்
மாநில அரசின் மூலம் 2 தவணைகளில் நிதி வெளியிடப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும், இத் திட்டத்தின் கீழ் தகுதியான சிறுபான்மையினர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்