நீர்நிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: கட்டடம் இடிக்கும் பணி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

நீர்நிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: கட்டடம் இடிக்கும் பணி தொடக்கம்

நீர்நிலை புறம்போக்கில், 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது சேலம் மாவட்டம், ஓமலூர், பாகல்பட்டி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, 5 ஏக்கரில், 'புது குட்டை' நீர்நிலை பகுதி உள்ளது. அதன் அருகே, புனித சூசையப்பர் பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது
50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீராதாரமாக, புதுக்குட்டை உள்ளது. அதை ஆக்கிரமித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பிரமாண்ட கட்டடம், சுற்றுச்சுவர் கட்டியதால், நீராதாரம் குறைந்துவிட்டது இதனால், நில அளவீடு செய்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள், வருவாய்த்துறையிடம் புகாரளித்தனர் கடந்த ஜூனில், நில அளவீடு செய்து, ஜூலையில், ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற, நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன், சுற்றுச்சுவர் அகற்றிய பின், நேற்று, கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது
இதுகுறித்து, பாகல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது: புறம்போக்கில், 20 சென்ட் நிலத்தில், ஆக்கிரமிப்பு கட்டடம், 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. விவசாயிகள் புகாரால், ஆக்கிரமிப்பை அகற்ற, கருப்பூர் ஆர்.ஐ., தமிழ்செல்வி உத்தரவிட்டார் அதன்படி, அந்நிறுவனத்தினரே கட்டடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு வாரத்தில், இப்பணி முடியும். இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews