மதுரையில் அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள் பெற கல்வி அலுவலகங்களில் கட்டாய கட்டணம் வசூலிப்பதாக உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் சி.இ.ஓ., நான்கு டி.இ.ஓ.,க்கள், 15 பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி ஊக்க ஊதியம் உள்பட பல்வேறு பணப் பலன்கள் தொடர்பான ஆவணங்கள் எழுதப்படும்
இதற்காக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. பணம் வழங்காவிட்டால் பைல்கள் கிடப்பில் போடப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
உதவி பெறும் ஆசிரியர்கள் கூறியதாவது: சி.இ.ஓ., அலுவலகம் தவிர பிற அலுவலகங்களில் 'வசூல் வேட்டை' நடக்கிறது
உயர்கல்வி ஊக்க தொகைக்கு 10 ஆயிரம், சரண்டருக்கு 2 ஆயிரம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 10 ஆயிரம் ரூபாய் என பட்டியல் வைக்காத குறையாக வசூலிக்கின்றனர்
சில ஊழியர் மட்டுமே நேர்மையாக உள்ளனர். ஒரு பள்ளியில் 13 ஆசிரியர்களிடம் நடந்த வசூல் குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்