கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக வேலூரைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ரூ.9,300 நிதி கொடுத்தான்.
வேலூர் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களின் இளைய மகன் சுஷாந்த் (12).
அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன். டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் என்பதால், அவருக்குப் பரிசாக பொன்னாடை போர்த்த மாணவன் சுஷாந்த் விரும்பியுள்ளார்.
இதற்காக, பெற்றோர் சிறுக சிறுக கொடுத்த பணத்தைச் செலவழிக்காமல் சுஷாந்த் சேர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கஜா புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை டி.வி., பத்திரிகைகளில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போன்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சுஷாந்த் வருத்தப்பட்டுள்ளார்..
இதையடுத்து, தான் சேமித்து வைத்திருந்த 9300 ஐ மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார்
அப்போது பேசிய மாணவன் சுஷாந்த், ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற மாணவர்களின் நிலைமையை உணர முடிகிறது.
அவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக நிதி கொடுத்துள்ளேன்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்