நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் : உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வினாத்தாளை தவறில்லாமல் மொழிபெயர்க்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
2019-20 நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எந்த தவறும் இருக்கக்கூடாது
2018 நீட் தேர்வில் தமிழ்வழி மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆண்டு நீட் தேர்வு மொழிபெயர்ப்பில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த நிலையில் 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு துறை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறுவதாவது: மொழி பெயர்ப்புகள் சரியாக இருக்க வேண்டும்
முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும் பின்பு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
இவ்வாறு சரி பார்த்தால் தான் மொழி பெயர்ப்பில் உள்ள பிழைகளை களைய முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதாவது தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, நாகேஷ்வரராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்
வரும் 2019-ல் நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கண்டிப்பாக ஆங்கில புலமை இருக்க வேண்டும்
இதனால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நீட் தேர்வை பொறுத்தவரை எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்