ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வில்வபதி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலர் ஞானமணி முன்னிலை வகித்தார்
மாவட்ட மகளிரணி செயலர் இந்திரா வரவேற்றார்.நிறுவனத் தலைவர் மாயவன், சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்
மாநில தணிக்கையாளர் துளசிங்கம், முன்னாள் மாநில துணைத் தலைவர் தண்டபாணி, மாநில தலைமை நிலைய செயலர் விஜயசாரதி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை 100 மற்றும் 101ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைமை நிலைய செயலர் சேகர் நன்றி கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்