அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்தியாவை வைத்து இருந்தது.
அமெரிக்காவின் டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இந்த லிஸ்டில் சேர்க்கப்படும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது. மிக முக்கியமாக கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு அடிக்கடி 73 ரூபாயையும் தாண்டிள்ளது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க போவதாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்