உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 21 ( October 21 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 21, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 21 ( October 21 )




அக்டோபர் 21 ( October 21 )
கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1097 – முதலாம் சிலுவைப் போர்:
அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1520 – பெர்டினென்ட் மகலன்
சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
1805 – நெப்போலியப் போர்கள் : டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில்
பிரித்தானியப் படைகள்,
பிரெஞ்சு , மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
1824 – யோசப் ஆசுப்டின்
போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.
1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38
செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
அமெரிக்கப் படைகள்
கூட்டமைப்பினரிடம்
வர்ஜீனியாவில் தோற்றனர்.
ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
1876 – யாழ்ப்பாணத்தில்
வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. [1]
1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது
வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.

1892 – உலக கொலம்பியக் கண்காட்சி
சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893 ,
மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.
1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்:
உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர்
செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை : செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்:
சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல்
ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.
1945 – பிரான்சில் முதற்தடவையாக
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.

1959 – வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து
நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.
1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..
1969 – சோமாலியாவில் இடம்பெற்ற
இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.
1971 – இசுக்காட்ஃப்லாந்து,
கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.
1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.

1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் : யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.
பிறப்புகள்
1328 – கோங்வு , சீனப் பேரரசர் (இ.
1398 )
1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் , ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834 )
1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869 )
1833 – ஆல்பிரட் நோபல் , சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896 )
1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955 )
1898 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ.
1981 )
1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978 )
1921 – இங்கிரிடு கிரோயெனவெல்டு , இடச்சு வானியலாளர் (இ. 2015 )

1923 – தொ. மு. சிதம்பர ரகுநாதன் , தமிழக எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மார்க்சிய சிந்தனையாளர் (இ. 2001 )
1925 – சுர்ஜித் சிங் பர்னாலா , இந்திய அரசியல்வாதி
1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்
1931 – சம்மி கபூர் , இந்திய நடிகர் (இ.
2011 )
1936 – பாரூக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்
1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988 )
1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1942 – கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1943 – தாரிக் அலி , பாக்கித்தான் வரலாற்றாளர், நூலாசிரியர்
1944 – இழான் பியர் சோவாழ்சு , பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்
1949 – பெஞ்சமின் நெத்தனியாகு , இசுரேலின் 9வது பிரதமர்
1958 – ஆந்தரே கெய்ம், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
1969 – வேல்ராஜ் , தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
1978 – சங்கீதா கிரிஷ் , தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி
1980 – கிம் கர்தாசியன் , அமெரிக்க நடிகை
1982 – மாட் டல்லாஸ் , அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1805 – ஹோரஷியோ நெல்சன் , ஆங்கிலேயத் தளபதி (பி. 1758 )
1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி.
1775 )
1949 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா , கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874

1967 – எய்னார் எர்ட்சுபிரங்கு , தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873 )
1984 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904 )
2002 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் , அமெரிக்க வானியலாளர் (பி. 1909 )
2010 – அய்யப்பன் , இந்தியக் கவிஞர் (பி. 1949 )
2012 – யஷ் சோப்ரா , இந்திய இயக்குநர் (பி. 1932 )
2014 – கஃப் விட்லம் , ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916 )
2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
சிறப்பு நாள்
இந்தியக் காவலர் நினைவு நாள் ( இந்தியா )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews