புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடத்துக்கு, 'ப்ளூ பிரிண்ட்' வழங்கப்படாததால், அரசு பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்
இதனால், வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
இதில், பிளஸ் 1 பாடத்திட்டம், நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் படுத்தும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்டது
கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
மேலும் தேர்வில், சிந்தனைத்திறனை தூண்டும் வகையில், பாடப்புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டதால், புதிய பாடத்திட்டத்துக்கான, 'ப்ளூ பிரிண்ட்' வெளியிடவில்லை இதனால், பாடங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரிய வைக்க முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, பிளஸ் 1 பொதுத்தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் நடத்தப்பட்டது
அதில், பாடத்தில் உள்பகுதியிலிருந்து வினாத்தாள்கள் கேட்டதற்கே, மாணவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. 28 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், சலுகை மதிப்பெண் மூலம், தேர்ச்சி விகிதம் அதிகரித்து காட்டப்பட்டது
நடப்பு கல்வியாண்டில், மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில், அதிக பாடங்கள் அடங்கியுள்ளன. இவற்றை முழுமையாக நடத்த, பள்ளி வேலைநாட்கள் போதாது
பொதுவாக, அரசு பள்ளிகளில் பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாத, ஏழை, எளிய மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதால், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதே கடினமானதாக இருக்கும்
இதனால், அரசு பள்ளிகளில், தேர்ச்சி மதிப்பெண்களை பெறும் வகையில், குறிப்பிட்ட பாடப்பகுதிகளை மட்டுமே நடத்தி, தேர்வுக்கு தயார் செய்வது வழக்கம்
அரசு பள்ளி மாணவர்களில், 98 சதவிகிதம் பேர், முழு பாடங்களையும் படிப்பதில்லை இப்படியிருக்கும் போது, 'ப்ளூ பிரிண்ட்' வழங்கப்படாததால், எந்த பாடத்துக்கு, எந்த அளவுக்கு தேர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரியவில்லை. குறிப்பிட்ட பாடங்களுக்கு, மாணவர்களை தயார் செய்து, அதிலிருந்து வினாக்கள வராத பட்சத்தில், தேர்ச்சி சதவிகிதம் வெகுவாக சரியும்
எனவே, எந்த பாடத்திலிருந்து, எத்தனை மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்பதையாவது, கல்வித்துறை விளக்க வேண்டும். இல்லாவிட்டால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளி மாணவர்களில், 15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறுவதே கடினம். இவ்வாறு அவர்கள் கூறினர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்