புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 09, 2018

Comments:0

புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.


அந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews