நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு புதிய முறை:ஆராய்ச்சி செய்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கட்டுப்படுத்த முடியாது: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 13, 2018

Comments:0

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு புதிய முறை:ஆராய்ச்சி செய்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கட்டுப்படுத்த முடியாது: மத்திய அரசு



நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்கு என்று புதிய முறை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக, இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணி மூப்பு மற்றும் ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கும் முறை கையாளப்பட்டு வந்தது. Kaninikkalvi.blogspot.com 

இனி அதற்குப் பதிலாக புதிதாக தேர்வு முறை ஒன்றினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் இருக்கும் முறையானது முற்றிலுமாக கைவிடப்பட உள்ளது. இந்தப் புதிய முறை வரும் 2022-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
Kaninikkalvi.blogspot.com 
கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுகளுக்கு புதிய நடைமுறை 2022ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மத்திய மனதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையில் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கட்டுப்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews